மதுரையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் : அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதியதில் மூதாட்டி பலி - இருவர் படுகாயம்
Dec 7 2019 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், சாலையில் தறிகெட்டு ஓடிய கார், அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு என்பவரது கார், சாலையில் தறிகெட்டு ஓடியதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது சாலை அருகேயுள்ள நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் மீது, கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய மேலும் இருவர், படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.