5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Dec 7 2019 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பெரியகொச பள்ளம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், கடந்த ஆண்டு, அவரது உறவினரின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, குழந்தையின் தாயார், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட குமரேசன், குற்றவாளி என உறுதியானதை அடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மகாலஷ்மி உத்தரவிட்டார்.
இதேபோல், புதுச்சேரியில், கடந்த 2015-ம் ஆண்டு, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பெண்ணின் உறவினர் ஜீவபாரதி என்பவர் மீது புதுச்சேரி போக்ஸோ சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திரு. தனபால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, ஜீவபாரதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கவும் அவர் உத்தரவிட்டார்.