ஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்? : காவல்துறை அதிகாரிகள் விசாரணை
Dec 7 2019 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்றதாக அவரது மகனிடம் ஓமலூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் மேல்வீதியை சேர்ந்த பொன்னுசாமிக்கும் அவரது மகன் செல்வத்திற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் பொன்னுசாமியை கட்டையால் தாக்கப்பட்டதில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, மகன்தான் தந்தையை அடித்துக் கொன்றார் என ஓமலூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடமும் மகன் செல்வத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சில மணிநேரம் இருக்கும் நிலையில் கொலை என காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.