தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை
Dec 7 2019 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம், தனது 17 ஆவது கட்ட விசாரணை முடிவில் 422 பேரிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த 16 கட்ட விசாரணையில், 400 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், 17-வது கட்ட விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற விசாரனையில், 22 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர் . இதனையும் சேர்த்து இதுவரை மொத்தம் 422 பேரிடம் விசாரனை நடைபெற்றுள்ளது.