சேதமடைந்துள்ள தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
Dec 7 2019 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையை சீரமைக்காத தமிழக அரசுக்கு, பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு, தினசரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், முக்காணி பகுதி முதல் திருச்செந்தூர் வரை, சுமார் 20 கிலோ மீட்டர் தூரம்வரை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவித்தனர்.