பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Dec 7 2019 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒரு ஆயுள் தண்டனையும், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு திம்மாவரம் பகுதியை சேர்ந்த நாகராஜன், மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நாகராஜனுக்கு 342 மற்றும் 354-B உள்பட 5 பிரிவின் கீழ், தண்டணையை அறிவித்தார்.