நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்
Dec 7 2019 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பள்ளி வளாகத்தின் உள்ளே, 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நுழைந்தது. இதனை கண்ட தலைமை ஆசிரியர் குமாரபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர், நாமக்கல் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வயல்வெளி பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி அப்பள்ளியின் வளாகத்திற்குள் விஷப்பாம்புகள், பூச்சிகள் வருவதாக வருவதாக கூறப்படுகிறது.