திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Dec 7 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் நடைபெறுவதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்துள்ள ரெட்டியபட்டி - நல்லமநாயக்கன்பட்டி சாலையில், புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் குறுக்கே 20 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெறும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள், பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவெ உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியுள்ள பொதுமக்கள், சாலை சீரமைக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.