உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிரடி அறிக்கை
Dec 9 2019 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்தின், ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திரு. ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை எனவும், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ அல்லது ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ அல்லது ரஜினியின் பெயரையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.