இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முறைப்படி பதிவு - தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்

Dec 9 2019 8:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழகச் செயலாளர் திரு. இ. லக்கிமுருகன் தலைமையில், போரூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ராமநாதீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய கழகம் சார்பில், தாமரை பாக்கம் கூட்டுச்சாலையில், கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.பொன்ராஜா தலைமையில், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக, எல்லாபுரம் ஒன்றிய கழக அலுவலகத்தை திரு. பொன்ராஜா திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி நகர கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் திரு.டி.ஏ.ஏழுமலை தலைமையில், திருத்தணி பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் செம்மஞ்சேரி திரு.குணசேகரன் தலைமையில், மாண்புமிகு அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கியும் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மறைமலை நகர் நகரக் கழகச் செயலாளர் திரு. ரவிக்குமார் தலைமையில், மார்க்கெட் அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கழகத்தினர் கொண்டாடினர். இதில் திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.சிட்டிசன் ஈஸ்வரன் தலைமையில், பார்க் சாலையில் உள்ள டாக்‍டர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கழகத்தினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இதில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில், புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. சி.சண்முகவேலு தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் உடுமலையில் உள்ள அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், விருதுநகரில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்‍களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.M.P.ஜெயராஜா உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தக்கலையில், எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கழகத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.ஜெங்கின்ஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பாக, மஞ்சக்குப்பத்தில் உள்ள டாக்‍டர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு. சி.வி.சிவகுருநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

கடலூர் மேற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கழக அமைப்புச் செயலாளரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான திரு.கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், செம்பனார் கோயில் ஒன்றிய கழகம் சார்பில், பேருந்து நிறுத்தம் அருகே, கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஒன்றிய கழக செயலாளர் திரு. கே.வி.ஜனார்தனம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00