வெங்காய விலை உயர்வைத் தொடர்ந்து பூக்கள் விலையும் கிடுகிடு : சிரமத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்
Dec 9 2019 9:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெங்காயம் மற்றும் காய்கறிகள் விலை உயர்வைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில், பூக்களின் விலையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி பூ சந்தைக்கு, பேரூரணி, செட்டிகுளம், அருப்புகோட்டை போன்ற இடங்களில் இருந்து மல்லிகை, பிச்சி, செண்டு போன்ற பூக்களும், ஊட்டி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் இருந்து ரோஜா பூக்களும் வருவது வழக்கம். தற்போது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் பண்டிகை காலங்களும் தொடர்ந்து வருவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், சந்தைக்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், மல்லிகை பூ கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாக்கும், பிச்சிப்பூ கிலோ ஆயிரத்துக்கும், ரோஜா பூக்கள் 250 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. இதனால் பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடனே பூக்களை வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.