தேனியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் சேதம் : விவசாயிகள் கவலை
Dec 9 2019 9:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், மழை வெள்ளத்தில் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, முதல் போக நெல் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், கம்பம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயலில் மழைநீர் தேங்கியதால் விளைந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. நெற்பயிர்கள் முளைத்து விடும் நிலையில் இருப்பதாகவும், இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.