தமிழகத்தில் தொடகப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு : கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்
Dec 9 2019 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தொடகப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவான உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கணகெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கண்கெடுக்கும் பணியை அரசு மேற்கொண்டது. இதில் ஆயிரத்து 531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களில் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதாகவும் 410 பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளதாகவும் தெரிவந்துள்ளது. இதனை தொடர்ந்து எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளில் இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.