விருதுநகர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரை தாக்கிய கருகல் நோய் : வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
Dec 9 2019 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுமார் 400 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள சின்னவெங்காயம் கருகல் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரையொட்டிய மேலதொட்டியப்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாச்சலபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிரை தற்போது கருகல் நோய் தாக்கியுள்ளது. இதனால் வெங்காய விவசாயம் முழுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால், தமிழக அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.