ஊரக உள்ளாட்சி பதவிதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது : வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது
Dec 9 2019 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சற்றுமுன் தொடங்கியது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாக்கலுக்கான கட்டணத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது.