தேனியில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து திருட்டு : மக்கள் அச்சம்
Dec 9 2019 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனியில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி சுப்புக்காலனி தெரு பகுதிக்குள் நேற்றிரவு நுழைந்த மர்மநபர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்து கார் மற்றும் சரக்கு ஆட்டோவின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, வாகனத்தின் கதவை திறந்து உள்ளே இருந்த டேப் ரிக்கார்டர் மற்றும் ஸ்பீக்கர்களை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக வாகன உரிமையார்கள் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.