இரண்டரை லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஊட்டி மலை ரயில் பயணத்திற்கு மொத்தமாக பதிவு செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் - குன்னூர்-ஊட்டி இடையே 7 நாடுகளைச் சேர்ந்த 77 பயணிகள் உற்சாகப் பயணம்
Dec 9 2019 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி தனியாக ஊட்டி மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலில் பயணிக்க 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலுத்தி, வாடகைக்கு எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அதில் பயணம் செய்து மகிழ்ந்தனர். ஆனால், மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு பாரம்பரிய மிக்க பழமையான இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 77 சுற்றுலா பயணிகள் இந்த உற்சாக பயணத்தை மேற்கொண்டனர்.