கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க முடியாது - மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Dec 9 2019 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதி வாக்காளரான திரு. சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதனை நிராகரிக்கக்கோரி கனிமொழி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை ஏற்க முடியாது என அறிவித்து நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக கனிமொழி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தனது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என கனிமொழி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு அவரது வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.