சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை 7 நாளில் உயர் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் - பொன்மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Dec 9 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான விசாரணை ஆவணங்களை ஒரு வாரத்தில் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த 30ம் தேதி நிறைவடைந்த நிலையில், இதுவரை அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளுக்கு பொன்மாணிக்கவேல் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ,ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு அதுதொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை கொடுக்க வேண்டும் என பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டு வழக்கினை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00