டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு
Dec 9 2019 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பதவிகளுக்கு, நடப்பு ஆண்டில் 181 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.