எகிப்து நாட்டிலிருந்து இரக்குமதி செய்யப்பட்ட 90 டன் வெங்காயம், கோவை மற்றும் திருச்சி வந்தடைந்தது
Dec 9 2019 9:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 90 டன் வெங்காயம், கோவை மற்றும் திருச்சி வந்தடைந்தது.
நாடு முழுவதும் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து, இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 டன் வெங்காயம், கோவை எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் 30 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திருச்சியில் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான வெங்கயம், தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.