தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புக்‍கு வாய்ப்பு - எச்சரிக்‍கையுடன் இருக்‍கும்படி மீனவர்களுக்‍கு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

Dec 10 2019 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் மிக கவனமுடன் கடலுக்‍குள் செல்ல வேண்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி இன்று, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்‍ கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், மிதமான மழைக்‍கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வறண்ட வானிலையே தென்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், அலைகள் 2 மீட்டர் முதல் 3 புள்ளி 4 மீட்டர் உயரம் வரை உயரும் என தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மிக கவனத்துடன் கடலுக்‍கு செல்ல வேண்டும் கேட்டுக்‍ கொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில், 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00