திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கைகலப்பு
Dec 10 2019 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பாகவே, அக்கட்சி தொண்டர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், மாநில த்தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிடாமல் பேசியது தொடர்பாக அப்போது மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த ஒருதரப்பினர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் மோதலில் ஈடுப்பட்டனர். இந்த மோதல் கைகலலப்பாக மாறியது.