தூத்துக்குடியில் தொடர்மழையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் வெளியேற அதிகாரிகள் உத்தரவு - மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Dec 10 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் மழை காரணமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை திடீரென வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டதால், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழை காரணமாக, தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு வழங்காமல், முகாம்களை விட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.