செவித்திறன் குறைபாடு குறித்து விழிப்புணர்வு பயணம் : கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆட்டோ பேரணி
Dec 10 2019 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காக குஜராத் வரையிலான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது.
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து 90 பேர் இந்த விழிப்புணர்வு ஆட்டோ பயணத்தில் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கிய ஆட்டோ விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, வழியாக 2,700 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வரும் 21-ம் தேதி குஜராத்தில் நிறைவடைகிறது.