உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை
Dec 10 2019 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் திரு.பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 27-ம் தேதி முதற்கட்டமாக, 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 27 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் திரு.பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் இருந்து, காணொலி காட்சி மூலம், தேர்தல் அலுவலர்களுடன் கலந்துரையாடிய அவர், முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதன்மை தேர்தல் அலுவலர் திரு.ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.