மணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

Dec 10 2019 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோனாம்பேடு பகுதியில் குளங்களில் சட்ட விரோதமாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதை தடுக்க கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மந்தப்பட்ட இடத்தை 8 வார காலத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததை அடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்து கொள்ளவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், இரண்டு வாரத்திற்குள் திருவள்ளூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00