பழனியில் ஓய்வூதியம் கிடைக்காததால் விரக்தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு
Dec 10 2019 9:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலைச்சுடர் மணி விருது பெற்ற தவில் இசைக்கலைஞர் முதியோர் ஓய்வூதியம் கிடைக்காததால் விருதை திருப்பி ஒப்படைக்க வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. தவில் இசைக் கலைஞரான இவர் இன்று காலை பை நிறைய மனுக்கள், தமிழக அரசு வழங்கிய கலைச்சுடர் மணி விருது, சான்றிதழ் மற்றும் சில புகைப்படங்களுடன் பழனி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது தனக்கு ஓய்வு ஊதியம் கிடைக்காததால் அரசு வழங்கிய விருதை திரும்ப ஒப்படைக்க வந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இசைக் கலைஞராக இருந்து வரும் மாரிமுத்து கால்களில் கட்டையை கட்டியபடி பொய்காலில் நடந்தபடி 61 கிலோ மீட்டர் தூரத்திற்கு தவில் இசைத்து சென்றதன் காரணமாக அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் கலைச்சுடர் மணி விருது வழங்கப்பட்டது.