இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள் மீட்பு - கோவை நூற்பாலையில் சிறுமிகளை மீட்ட தனிப்படை போலீஸ் - சிறுமிகளை விற்ற உறவினர், தரகர்களிடம் தொடர் விசாரணை

Dec 14 2019 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

வறுமை காரணமாக, 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட திருவாரூரைச் சேர்ந்த 2 சிறுமிகளை, தனிப்படை போலீசார் மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த 11 வயது சிறுமிகள் சங்கீதா மற்றும் கவிதா ஆகிய இருவரையும், அவர்களது பாட்டி விஜயலெட்சுமி, கோவையில் செயல்படும் நூற்பாலைக்கு, தரகர்கள் மூலமாக வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்காக, சிறுமி ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் இருவருக்கும் சேர்த்து இருபதாயிரம் ரூபாயை, விஜயலட்சுமி வாங்கியதாகக் கூறப்படுகிறது. சிறுமிகளின் உறவினர் சாந்தி என்பவரிடம், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், அன்னூர் பகுதியில் செயல்படும் நூற்பாலைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நூற்பாலைக்குச் சென்று, சிறுமிகள் இருவரையும் மீட்ட போலீசார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் அவர்களை ஒப்படைத்தனர். வறுமை காரணமாக சிறுமிகளை வேலைக்கு அனுப்பினார்களா? அல்லது பணத்திற்காக விற்றார்களா என்பதை கண்டறிய, சிறுமிகளின் பாட்டி விஜயலட்சுமி, தரகர்கள் சகுந்தலா, கனகம் ஆகியோரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00