நாமக்கல் அருகே, மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ரவுடி - பேத்தியிடம் தவறாக நடக்க முயன்றதை தடுத்ததால் வெறிச்செயல் - பொதுமக்களின் கல்லடிக்கு பயந்து தப்பியோடிய ரவுடியும் பலி
Dec 14 2019 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் அருகே, மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ரவுடியை, பொதுமக்கள் கல்லால் அடித்தே கொன்றனர்.
குருசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, தனது கணவர் இறந்த நிலையில், சாமுவேல் என்பரை 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த வாசுகி, திவ்யா, வசந்தி ஆகிய 3 பெண் குழந்தைகளும், குருசாமிபாளையத்தில் உள்ள பாட்டி தனம்மாள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரவுடி தொழில் செய்துவந்த சாமுவேல், கல்லூரியில் பயின்று வரும் வசந்தியை, தன்னுடன் வருமாறு வற்புறுத்தி அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு, தனம்மாள் வீட்டிற்குச் சென்ற சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளார். மூதாட்டியை மீட்க அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் முயன்ற நிலையில், கையில் வைத்திருந்த ஆசிட்டை வீசியதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சாமுவேல், பொதுமக்களின் கல்லடிக்கு பயந்து தப்பியோடியபோது, கீழே விழுந்து தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.