கடனுக்கு வட்டி கொடுக்காததால் வீட்டை இடித்து அராஜகம் - மதுரையில் கந்துவட்டி கும்பல் அட்டூழியம் - பிள்ளைகளுடன் வீதியில் நிற்பதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கண்ணீர்

Dec 14 2019 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் வட்டி பணம் கொடுக்காதவரின் வீட்டை, கந்துவட்டி கும்பல் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சிங்கம்பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த குமார்-பரமேஷ்வரி தம்பதிக்கு, நந்தினி, காவ்யாஞ்சலி, சாதனா என, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வரும் குமார், குடும்ப வறுமை, பிள்ளைகளின் படிப்பு செலவு போன்ற காரணங்களால், கடந்த 2014-ம் ஆண்டு, நாகராஜன் என்பவரிடம், வீடு மற்றும் நிலப் பத்திரங்களை அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். 3 ஆண்டுகள் வட்டி கட்டிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வட்டி தொகை கட்டாததால், மீட்டர் வட்டி கணக்கிட்டு, 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அசல் மற்றும் வட்டியைக் கொடுக்க முடியாததால், குமாரின் வீட்டை, கந்துவட்டி கும்பல், இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். வீட்டை இடித்து விட்டதால், 3 பிள்ளைகளுடன் உணவின்றி தவித்து வருவதாக, பாதிக்கப்பட்ட பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

கந்துவட்டி கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், மாநகர காவல் ஆணையரிடம், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த நாகராஜன் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00