கோபிசெட்டிப்பாளையத்தில் நிதி நிறுவன ஊழியரை சாலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் - சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை

Dec 14 2019 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில், நிதி நிறுவன ஊழியரை, அலுவலகத்திற்குள் புகுந்து, 4 பேர் கொண்ட கும்பல், வெட்டிப் படுகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காட்டில் செயல்படும் நிதி நிறுவனத்தில், சேலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், பணியாற்றி வந்தார். அலுவலகத்தில் சண்முகம் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்திற்குள் புகுந்து, ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அலறியடித்து, அலுவலகத்தைவிட்டு வெளியே ஓடிய சண்முகத்தை, அந்த கும்பல், விடாமல் துரத்திச்சென்று வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00