கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
Dec 14 2019 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் ATM மையத்திற்கு நேற்று சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஏசன் என்பவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பதை கண்டறிய, பேருந்து நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.