நாகூரில் கடல் அரிப்பால் இழுத்து செல்லப்பட்ட குடியிருப்பு பகுதி - 300 மீட்டர் அளவுக்கு உட்புகுந்தது கடல் நீர்
Dec 14 2019 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகூரில் கடலரிப்பு காரணமாக மீனவர்களின் குடியிருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நாகூருக்கும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூருக்கும் இடையே பட்டினச்சேரி மீனவ கிராமம் அமைந்துள்ளது. வாஞ்சூரில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதால் கிராமத்தின் உள்ளே கடல் நீர் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த கடல் அரிப்பு காரணமாக கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. 300 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளதால், பட்டினச்சேரி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மீனவர்களின் குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பதற்காக அரசு அறிவித்த கருங்கல் தடுப்புச்சுவரை உடனடியாக அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.