தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் விசாரணை நாளை மறுதினம் முதல் மீண்டும் நடைபெறும் - வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
Dec 14 2019 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் வழக்கு நாளை மறுதினம் முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து எழுந்த நிர்பந்தம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. எனினும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மான நிறைவேற்றி தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் திரு. சிவஞானம், திருமதி. பவானி சுப்புராயன் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நாளை மறுநாள் முதல் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தனர். ஸ்டெர்லைட் வழக்கு மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.