பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய 25-க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்
Dec 14 2019 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி திரு. வி.எஸ் பாபு உட்பட 25-க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு. V.S. பாபு, கும்பகோணம் நகர பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு. A. ராஜ்குமார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. M.ரெங்கசாமி முன்னிலையில் பா.ஜ.க நிர்வாகிகள் தங்களை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களை திரு. M.ரெங்கசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் நகரக் அ.ம.மு.க. செயலாளர் திரு.குருமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்டக் கழக M.G.R. அணியின் இணைச் செயலாளர் திரு. கோபால், நகரப் பொருளாளர் திரு. தங்கராசு சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. பஷீர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.