ராமேஸ்வரம் அருகே மாதிரி தேர்தல் தடுத்து நிறுத்தம் - வாக்குச்சீட்டுக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
Dec 14 2019 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமேஸ்வரம் அருகே மாதிரி தேர்தல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்ய முயற்சி செய்ததை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் வாக்குச்சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஊராட்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியானது. அவர்களில் செல்வாக்குப் பெற்ற வேட்பாளர் யார் என்பதை அறிவதற்காக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியத்தியுள்ளனர். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்பிய நான்கு பெண்கள் புகைப்படத்துடன் கூடிய தனிப்பட்ட ஓட்டு சீட்டு தயார் செய்தனர். ராமேஸ்வரம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்று மாதிரி தேர்தலை நிறுத்தினர்.