சுடுகாடு அமைத்து தராவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் : கோவில்பட்டியில் பொதுமக்கள் கடும் எச்சரிக்கை
Dec 15 2019 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, உடனடியாக சுடுகாடு அமைத்து தராவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஊத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கே.குமராபுரம் கிராமத்தில், 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடு இல்லாமல் தவித்து வருகின்றனர். கிராமத்தில் இறப்பவர்களை அருகில் இருக்கும் வனத்துறை பகுதியில் தான் காலம் காலமாக புதைத்து வருகின்றனர். அண்மைக்காலமாக வனத்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதோடு, உடலை புதைக்க வனத்துறையினருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு உடனடியாக சுடுகாடு அமைத்து தராவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.