காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலைய கட்டுமானத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு : கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Dec 15 2019 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் கட்ட, நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரையொட்டி புதிய இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் வட்டத்தில் 6 கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 கிராமங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவியது. காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள பரந்தூர் ஏகனாபுரம், எடையார்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றினர். மேலும் பரந்தூர்- சுங்குவார்சத்திரம் சாலையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.