திருவாரூர் வடகண்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்‍கள் கிழித்தெறியப்பட்ட சம்பவம் - எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடு என பல்வேறு தரப்பினரும் கண்டனம்

Dec 15 2019 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பூட்டை உடைத்து அங்கிருந்த வேட்பு மனுக்‍கள் கிழித்தெறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆளுங்கட்சியினர் பல்வேறு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்‍கட்சியினர் வேட்பு மனுத் தாக்‍கல் செய்தால், அவர்கள் மீது போலீசாரை கொண்டு பொய் வழக்‍கு தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடுகளின் உச்சகட்டமாக, வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தின் பூட்டு உடைக்‍கப்பட்டு, அங்கிருந்த வேட்பு மனுக்‍கள் கிழித்து வீசப்பட்டுள்ளதுடன், பணமும் கொள்ளையடிக்‍கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்‍கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் அராஜகச் செயலுக்‍கு கிராம மக்‍கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00