மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - 18 பேர் பலியானதாக தகவல்
Mar 1 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மர் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது. ராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளக்து.