பொதுமக்களை பாதிக்கும் வகையில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் : குவைத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
Jul 1 2018 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்களை பாதிக்கும் வகையில் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, குவைத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் குவைத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் மக்களை பாதிக்கும் திட்டங்களை அமல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டு அரசாய் திகழும் எடப்பாடி துரோக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகமெங்கும் மக்களை சந்திக்கும் மக்கள் புரட்சி பயணத்தை மேற்கொண்டு தமிழக மக்களின் நன்மதிப்பையும், சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து வரும் கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிகழ்ந்து வரும் மக்கள் விரோத எடப்பாடி பழனிச்சாமி அரசின் அவலங்களை படம்பிடித்து தோலுரித்துக் காட்டும் ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், குவைத் மண்டல கழக அமைப்பாளர் திரு.டி.வேப்பங்குளத்தை சேர்ந்த மதுரை திரு.எம்.சக்திவேல் ராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.