அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோருக்கு அஞ்சலி : 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளைக் கொடிகளுடன் அஞ்சலி
Sep 17 2021 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளைக் கொடிகள் நடப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 4 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அவர்களுக்கு அமெரிக்க நினைவுகள் என்ற தலைப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தலைநகர் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனையயொட்டி, கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில், 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஆறரை லட்சத்துக்கும் அதிகமான வெள்ளைக் கொடிகள் நடப்பட்டுள்ளன.