275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து சம்பவம் : அடையாளம் தெரியாத நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு
Jun 6 2023 7:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது மாநில ரயில்வே போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகியிருப்பதுடன் உலகையே உலுக்கி இருக்கிறது. விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. ஒடிசா மாநில ரயில்வே போலீசாரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விபத்து தொடர்பாக ரயில்வே சட்டம் 153, 154, 175 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 337, 338, 304 A மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.