திண்டிவனம் அருகே 77 வயது மூதாட்டிக்கு 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி - அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்

Sep 13 2021 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 77 வயது மூதாட்டிக்கு 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் கலக்‍கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விட்டலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 77 வயதான கிருஷ்ணவேணி அம்மாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍ கொண்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூதாட்டி கிருஷ்ணவேணி அம்மாளுக்கு 2வது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணவேணி அம்மாள் தனக்கு உடல் வலி இருப்பதாகக்‍ கூறி விட்டலாபுரத்தில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சை முகாம் என நினைத்து சென்ற மூதாட்டி கிருஷ்ணவேணி அம்மாளிடம் உரிய முறையில் விசாரிக்காமல் அங்குள்ள சுகாதார துறையினர் 3வது முறையாக கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

இதனையறிந்து பதற்றம் அடைந்த கிருஷ்ணவேணி அம்மாளின் மகன் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மூதாட்டி கிருஷ்ணவேணி அம்மாளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூறி சமாதானம் செய்து சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00