தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் - வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Dec 2 2021 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் திரு. வெ.பழனிக்குமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், செயலர் திருமதி சுந்தரவல்லி, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வரும், 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, ஓட்டுச்சாவடிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.