ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானம் : கருப்புப் பெட்டியை ஒப்படைக்க உக்ரைன் வலியுறுத்தல்
Jan 21 2020 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரான் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்புப் பெட்டியை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்து சில மணிநேரத்தில், ஈரான் வான் எல்லையில் பறந்த உக்ரைன் விமானத்தை சந்தேகத்தின் பேரில் ஈரான் சுட்டுவீழ்த்தியது. இந்த சம்பவத்தில், விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 176 பேரும் உயிரிழந்தனர். ஈரான் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் பலியாகினர். இந்நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை என ஈரான் அறிவித்திருந்தது. ஆனால், கருப்புப் பெட்டியை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என உக்ரைன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.