ஸ்பெயின் நாட்டில் சூறாவளிக்காற்று மற்றும் கடும் குளிரில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
Jan 21 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில் சூறாவளிக்காற்று மற்றும் கடும் குளிரில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலன்சியா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. கடும் மேகமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநிலமான அவிலாவில் கடும் குளிரைத் தாங்க முடியாத 63 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் இதுவரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு இது போன்ற நிலையே தொடரும் என வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவிக்கின்றன.