பராகுவே நாட்டுச் சிறைச் சாலையில் சுரங்கப் பாதை அமைத்துத் தப்பிய கைதிகள் - 75 பேரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி
Jan 21 2020 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பராகுவே நாட்டுச் சிறைச் சாலை ஒன்றில் ரகசிய சுரங்கம் அமைத்து 75 கைதிகள் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் PEDRO JUAN நகரச் சிறையில் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த கொடூரமான கைதிகள் உட்பட 75 பேர் ரகசிய வழி ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அனைவரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரேசில் நாட்டுக்கு அருகே இச்சிறைச்சாலை அமைந்துள்ளதால், அந்நாட்டு காவல் துறையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.