தாய்லாந்து தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரிப்பு - கரும்புக்கு தீ வைத்தலே மாசு அதிகரிக்கக் காரணம் என தகவல்
Jan 21 2020 7:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து தலைநகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு, விவசாயிகள் கரும்பு பயிர்களில் தீ பற்றவைப்பதே மிகப்பெரிய காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்று அதிக அளவு மாசடைந்துள்ளதால் 437 பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அளவு 150 ஆக இருந்தாலே அது சுவாசிக்க இயலாத காற்று என்ற நிலையில், தற்போது இந்த அளவு 170 ஆக உள்ளது. இந்நிலையில், கரும்பு விவசாயிகள் அறுவடைக்கு முன்னும், பின்னும் தீ மூட்டுவதே காற்று மாசு அதிகரிப்பதற்குக் காரணம் என கூறப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கரும்புக்குத் தீ வைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், அறுவடைக்கான செலவினங்கள் 30 சதவிகிதம் உயர்ந்து விட்டதால் தான் தீ வைப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.